பிள்ளையானின் மனு தொடர்பில் உயர் நீதிமன்றம் முக்கிய முடிவு
கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இது குறித்த விசாரணை இன்று(23) இடம்பெற்றுள்ளது.
அந்த மனுவில், அவரது கைது மற்றும் தடுத்து வைப்புகள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவையாக உள்ளன எனக் கூறப்படுகிறது.
விசாரணை திகதி
மனுவில் சட்டத்துக்கு முன் சமத்துவம், அரசியல் கருத்தின் அடிப்படையில் பாகுபாடு செயல், காரணமின்றி கைது, சட்டப்படி நடைமுறை பின்பற்றப்படாமல் கைது ஆகிய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பிள்ளையான் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மனுதாரர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா மற்றும் சட்டத்தரணி உதய கம்மன்பில ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
இதன்படி, மனுவைத் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதுடன், அதற்கான அடுத்த விசாரணை திகதியை பின்னர் அறிவிக்க முடிவு செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
