பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பு: உயர் அதிகாரியுடன் சென்ற பௌத்த பிக்கு!
இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, பாதுகாப்பு உயர்அதிகாரி ஒருவரும் இனவாத பௌத்த பிக்கு ஒருவரும் இரகசியமாக சந்தித்தாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மட்டக்களப்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதலின் பின்னணியுடன் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு என சனல் 4 ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.
பௌத்த பிக்கு
குறித்த தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட பாதுகாப்பு உயர் அதிகாரி, பிள்ளையான் மற்றும் இனவாத கருத்துக்களை வெளியிடும் பௌத்த பிக்கு ஆகியோருக்கு இடையில் இந்த இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு பற்றி புலனாய்வு செய்தி அறிக்கையிடும் வலையொளி தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதானி ஷானி அபேசேகரவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றின் எதிரில் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
