பாதாள உலக குழுக்கள் தீட்டிய திட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல்
காவல்துறை உத்தியோகத்தர்களை கொலை செய்ய திட்டம்
போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பாதாள உலக அடக்கு முறைகளில் நேரடியாக ஈடுபட்டு ஓய்வுபெற்ற பல காவல்துறை உத்தியோகத்தர்களை கொலை செய்ய பாதாள உலகக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மேல் மாகாண பிரதேச சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஒருவரும், சேவையில் உள்ள பல காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் காவல்துறை உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை திணைக்கள வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,