தென் இந்தியாவின் ஜான்சி ராணியின் வீரத்தை புகழ்ந்த நரேந்திர மோடி..!
தென் இந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்படும் வேலு நாச்சியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
வீர மங்கை வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய முதல் வீரப்பெண்மணி ஆவார்.
இவர் மகாராணியாக 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட பெருமைக்குரியவர்.
நரேந்திர மோடி
அவரது பிறந்தநாளில் அவரை புகழ்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டரில், “வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செழுத்த கடமைபட்டுள்ளேன்.
தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார்.
வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்.
— Narendra Modi (@narendramodi) January 3, 2023
அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்.” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்