இந்தியாவின் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தேர்வான 20 வீரர்கள்
எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி சார்பில் விளையாட உள்ள வீரர்கள் குறித்த உத்தேச பட்டியலை இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இந்திய அணியில் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சர்வதேச போட்டி
இவர்களுக்கு இந்ந வருடம் நடைபெற உள்ள பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் வீரர்களை மதிப்பீடு செய்து உலகக் கோப்பை தொடருக்கான அணியினை பிசிசிஐ உறுதி செய்யும் என தெரிகிறது.
இதில் ஐபிஎல் போன்ற உள்ளூர் துடுப்பாட்ட செயல்பாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
இந்திய அணி
அதோடு யோ-யோ சேதனை மற்றும் டெக்ஸா ஸ்கேன் போன்ற சோதனைகளில் தகுதிபெறும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
இதெல்லாம் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிரதான வீரர்கள் காயம் காரணமாக தொடரை இழந்ததே இதற்கு காரணம் என தெரிகிறது.
இந்த முடிவு பிசிசிஐ நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது எனவும் இந்திய துடுப்பாட்ட அணி வரும் 3-ம் திதி இலங்கை அணிக்கு எதிராக டி20 துடுடப்பாட்ட தொடரில் விளையாட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.