பட்டம் பறக்கவிட்ட சிறுவனுக்கு வழங்கப்பட்ட விஷம்..!
இனந்தெரியாத ஒருவரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் குளிர்பானத்தை அருந்திய சிறுவனொருவன் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பட்டமொன்றை பறக்கவிட்டு கொண்டிருந்த சிறுவனுக்கே இந்த குளிர்பானம் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்

இந்த 12 வயது சிறுவன் ஹொரண வறல்லஹேன பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் உள்ள வயல்வெளியில் பட்டத்தை பறக்கவிட்டுக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் ஐஸ் பானம் அடங்கிய குளிர்பானத்தை கொடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதி

சிறுவன் அதனை ஏற்க மறுத்த நிலையில், இனந்தெரியாத நபர் அதனை சிறுவனுக்கு பலவந்தமாக கொடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதை குடித்த சிறுவன் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மயக்கமடைந்த சிறுவன் தற்போது ஹொரணை ஆதார வைத்தியசாலையின் விடுதி இலக்கம் ஆறில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.