தமிழர் பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் சுற்றிவளைப்பு
திருகோணமலையில் (Trincomalee) அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கந்தளாய் காவல் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
[KMGKCUC ]
மான் வேட்டை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெவசிறிகம பகுதியைச் சேர்ந்த 40 வயது கந்தே கெதர சமிந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இந்தத் துப்பாக்கியை மான் வேட்டைக்குப் பயன்படுத்தி வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரகசிய தகவல்
கந்தளாய் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சின்னக்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியும் மற்றும் ஒரு தோட்டாவுமே கைப்பற்றப்பட்டுள்ளது.
கந்தளாய் தலைமை காவல்துறை பரிசோதகர் எல்.எம். சஞ்சீவ பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
