முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று சட்டவிரோத மோட்டார்சைக்கிள் அணிவகுப்பு! மூவர் கைது
கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று வடக்கில் அனுமதியின்றி நடத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் அணிவகுப்பு தொடர்பாக முல்லைத்தீவு காவல்துறையினரால் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அணிவகுப்பில், மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் குழுவினர் தலைக்கவசம் (Helmet) அணியாமல் மிக அபாயகரமான முறையில் பயணித்துள்ளனர்.
இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வைரலாகப் பரவியதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை விரிவாக ஆய்வு செய்ததன் மூலமே இந்தச் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், இந்த அணிவகுப்பில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களைக் கண்டறிவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, இந்த விசாரணைக்குக் கூடுதல் காலம் எடுத்துக்கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |