தமிழர் தாயகத்தில் காவல்துறை அதிகாரியின் சமுக விரோத செயல் -அதிரடியாக கைது
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (5) இரவு காவல் நிலையத்தில் வைத்தே கைது செய்துள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டுவருவதாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தொடர் கண்காணிப்பு
இதனையடுத்து அவரை கண்காணித்துவந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு கடமையை முடித்துவிட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேறி போது அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
போதைக்கு அடிமை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் போதைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
