பாரவூர்தி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
srilanka
police
By Vasanth
பாரவூர்தி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதேவேளை தாக்கப்பட்ட பாரவூர்தி சாரதியின் சாரதி உரிமம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பன்னிப்பிட்டி பகுதியில் நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றதும் பொலிஸ் அதிகாரி தாக்கிய வீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்