கிறிஸ்மஸ் தினத்தன்று இலங்கையில் 6 பேர் மரணம்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
#Police #Death #Sri Lanka
By Vasanth
கிறிஸ்மஸ் தினமான நேற்று நாட்டின் பல பகுதிகளில் நடந்த சாலை விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 39 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரதிப்பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப்பேச்சாளருமான அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் இறுதியில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே, இந்த காலகட்டத்தில் வாகனம் ஓட்டும் போதும் சாலையில் நடந்து செல்லும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கிறிஸ்மஸ் தினத்தன்று ஏற்படும் விபத்துக்கள் முந்தைய ஆண்டை விட 41 சதவீதம் குறைந்துள்ளது இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 274 ஆக குறைந்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி