விபத்துக்களை குறைக்க கிளிநொச்சி காவல்துறையினர் எடுத்துள்ள தீர்மானம்
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka
By Raghav
விபத்துகளை குறைப்பதற்கு கிளிநொச்சி (Kilinochchi) காவல்துறையினர் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி கசாயம் வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தினால், பல வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.
கொத்தமல்லி கசாயம்
இவற்றைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி வீதி போக்குவரத்து காவல்துறையினர் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு உறக்க நிலையை தணிப்பதற்கு கொத்தமல்லி கசாயம் வழங்கி வருகின்றார்கள்.
அந்த வகையில் கிளிநொச்சி காவல் நிலையம் முன்பாக வீதி போக்குவரத்து காவல்துறையினர் இவ்வாறான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை சிறப்பு அம்சம் என வாகன சாரதிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி