அதிவேக வீதியில் விநோத பயணம் -ஆரம்பமானது விசாரணை
srilanka
police
colombo
By Vasanth
தெற்கு அதிவேக வீதியில், வீதி நடைமுறைகளை மீறியவகையில் காரில் பயணம் செய்த நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காரின் யன்னல்கள் வழியாக அமர்ந்து, விநோதமாக சென்ற நால்வரை கண்டறியும் வகையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த கார், கண்டி நகரிலுள்ள ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி