துப்பாக்கி உரிமதாரர்களுக்கு காவல்துறையின் சிறப்பு அறிவிப்பு
சுய பாதுகாப்பிற்காக அனுமதி பெற்று துப்பாக்கிகளை வைத்திருக்கும் உரிமதாரர்களின் துப்பாக்கிகள் தொடர்பாக காவல்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் போது, அனைத்து உயிர் காக்கும் துப்பாக்கி உரிமதாரர்களும், உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து அரை வருடம் கழித்து, துப்பாக்கியை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து, துப்பாக்கியின் செயல்பாடு மற்றும் அதன் எண் ஆகியவை உரிமத்தில் உள்ள எண்ணுடன் பொருந்துகின்றன என்பதற்கான சான்றிதழைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
காவல்துறை தலைமை ஆய்வாளர், அனைத்து காவல் நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு, மேலே குறிப்பிட்டபடி இனிமேல், ஒவ்வொரு அரை வருடத்திற்கும் ஒருமுறை உயிர் காக்கும் துப்பாக்கி உரிமதாரர்களின் துப்பாக்கிகள் மற்றும் உரிமங்களைப் பரிசோதித்து, உரிய சான்றிதழை வழங்கி, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான தங்களது உயிர் காக்கும் துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பித்துள்ள அனைத்து உரிமதாரர்களும், உரிமம் பெற்று அரை வருடம் கடந்த பிறகு, துப்பாக்கியை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அதன் செயல்பாடு மற்றும் எண் ஆகியவை உரிமத்தில் உள்ள எண்ணுடன் பொருந்துகின்றன என்பதற்கான சான்றிதழைப் பெறுமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |