அமெரிக்காவில் மீண்டும் இனவெறி தாக்குதல் - கறுப்பின இளைஞரை அடித்தே கொன்ற காவல்துறை (காணொளி)
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜோர்ஜ் பிளாய்ட் என்ற இளைஞரை அமெரிக்க காவல்துறையினர் கொன்ற நிலையில், இன்று டயர் நிக்கோலஸ் என்பவரும் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டில் டிரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில், கறுப்பின வாலிபர் ஜோர்ஜ் பிளாய்ட் என்பவரை காவலர்கள் தாக்கினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துகளையும், இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், இரண்டு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் என்ற இடத்தில் கறுப்பின இளைஞர் டயர் நிக்கோலஸ்(29) விதியை மீறி காரை செலுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, 5 காவலர்கள் நிக்கோலஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவில் கண்டனம் குவிந்து வரும் நிலையில், இளைஞர் நிக்கோலஸை தாக்கிய 5 காவலர்கள் பணி நீக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

