சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி! பணியிலிருந்து நீக்கம்
srilanka
police
maharagama
By Vasanth
மஹரகம - ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய சந்தியில் பாரவூர்தி சாரதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மஹரகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் உத்தரவுக்கமைய அவர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டிருந்ததது
குறித்த காணொளியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை தாக்கி அவரின் மேல் பாய்ந்து அவரும் கீழே விழுவது போல் காட்சிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்