நன்கொடை பெட்டியிலிருந்து பணத்தை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் கைது!
நன்கொடை பெட்டியை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை மொரட்டுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் இராஜதந்திர பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ - ரத்தாவத்த பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இந்த சம்பவம் இட்மபெற்றுள்ளது.
பணத்தை திருடுவதற்காக நன்கொடைப் பெட்டியை உடைத்த சந்தேகநபரை பல்பொருள் அங்காடி ஊழியர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட மூத்த குடிமக்கள் சார்பாக பல்பொருள் அங்காடியில் வைக்கப்பட்டிருந்த நன்கொடைப் பெட்டியில் இருந்த பணத்தை சந்தேகநபர் திருடியுள்ளார்.
கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.