யாழில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி
யாழில் (Jaffna) மோட்டார் சைக்கிள் விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து இன்றையதினம் (18.03.2025) காலை 8.10 மணியளவில் சுன்னாகம் கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றையவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மேலதிக விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக, தெல்லிப்பழையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் சுன்னாகம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ள நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று ஹையேஸ் ரக வாகனத்தில் விபத்துள்ளாகி இறந்துள்ளது.
வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று இன்று அதிகாலை 12:30 மணியளவில் நீர்கொழும்பு, யாழ்ப்பாண வீதியில் சென்ற ஹையேஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அந்த குட்டி யானை இறந்துள்ளது.
இருப்பினும் வாகனத்தில் சென்றவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
அவதானத்தோடு வாகனங்களை செலுத்த கோரிக்கை
தற்பொழுது விவசாய அறுவடை காலமென்பதனால் யானைகள் வயல்கள் மற்றும் நீரோட்டம் உள்ள குளங்களிற்கு செல்வதற்கு பல இடங்களில் பிரதான வீதியை கடந்து கூட்டம் கூட்டமாக செல்கின்றன.
ஆகையினால் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் உன்னிப்பாகவும் மிக அவதானத்தோடும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்