அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் காவல்துறையினர் அடாவடி (படங்கள்)

Sri Lanka Police Sri Lankan Tamils Mullaitivu Maaveerar Naal
By Sathangani Nov 27, 2023 09:48 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீதியோரத்திலே கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றிய நிலையில் அங்குள்ள மக்கள் ஆத்திரமடைந்து காவல்துறையினருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

துயிலும் இல்ல காணியானது யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை இராணுவத்தின் 24ஆவது எஸ் எல் என் ஜி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த துயிலும் இல்லத்தில் மக்கள் நிம்மதியாக அஞ்சலி செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் துயிலுமில்ல காணியிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு மக்கள் கோரி வருகின்ற நிலைமையில் இராணுவத்தினர் வெளியேறாத நிலையில் வீதியோரத்திலேயே மக்கள் சுடரேட்டிய அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

தமிழர்களின் நினைவுகூரும் உரிமையை மீறும் சிறிலங்கா அரசு: யஸ்மின் சூக்கா கண்டனம்

தமிழர்களின் நினைவுகூரும் உரிமையை மீறும் சிறிலங்கா அரசு: யஸ்மின் சூக்கா கண்டனம்


காணியை வழங்குமாறு கோரிக்கை

இவ்வாறான நிலையில் துயிலும் இல்ல காணியானது தனியார் காணியாக காணப்படுகின்ற நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாதிருந்த ஒரு பகுதி காணியை தனிநபர் ஒருவர் காணி உரிமையாளரிடருந்து பெற்று வர்த்தக நிலையமொன்றை அமைத்து நடாத்தி வருகிறார்.

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் காவல்துறையினர் அடாவடி (படங்கள்) | Police Raided In Maveerar Thuyilumillam Alampil

இதற்கும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருவதோடு துயிலுமில்ல காணியில் இருந்து இராணுவம் மற்றும் வர்த்தக நிலையம் அமைத்த தனிநபர் ஆகியோரை வெளியேறி காணியை துயிலுமில்லத்துக்கு வழங்குமாறு கோரி போராடி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இம்முறை 2023 தமிழ் தேசிய மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்தபோது இந்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக கொடிகளை கட்டி விளக்குகள் வைக்க வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுடன் வர்த்தக நிலைய உரிமையாளர் முரண்பட்ட நிலையில் பணிக்குழுவினருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

எழுச்சிக் கோலம் பூண்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் : தயார் நிலையில் நினைவேந்தல் நிகழ்வு(படங்கள்)

எழுச்சிக் கோலம் பூண்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் : தயார் நிலையில் நினைவேந்தல் நிகழ்வு(படங்கள்)


பணிக்குழுவைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது

இதனடிப்படையில் தருணம் பார்த்திருந்த காவல்துறையினர் அங்கு வருகை தந்து இரண்டு தரப்பினை சேர்ந்தவர்களிலும் சிலரைக் காவல் நிலையம் அழைத்து வந்ததோடு குறித்த இடத்தில் இருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் காவல்துறையினர் அடாவடி (படங்கள்) | Police Raided In Maveerar Thuyilumillam Alampil

மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு தருணம் பார்த்திருந்த காவல்துறையினர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த அலங்காரத்தை சிதைத்து மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக இந்த தனி நபர் மீதும் அங்குள்ள மக்கள் தங்களது விசனங்களை வெளியிடுகின்றனர்.

தங்களுடைய மக்களின் உரிமைக்காக போராடிய இந்த மாவீரர்களை வழிபடுவதை தடுப்பதற்கு இவ்வாறான எம்மாவர்களும் துணை போகின்ற செயற்பாடுகளுக்கு அவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.


இவ்வாறான நிலையில் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டவர்களில் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவை சேர்ந்த ஒருவர் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறியிருப்பினும் 2023 தமிழ் தேசிய மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பணிக் குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விமானப்படை தாக்குதலில் உயிரிழந்த மக்கள்: 33 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு (படங்கள்)

இலங்கை விமானப்படை தாக்குதலில் உயிரிழந்த மக்கள்: 33 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு (படங்கள்)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025