லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தர்...! பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தர் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
46 வயதுடைய பாலசங்கர் நாராயணன் என்பவர் குறித்தே காவல்துறை அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் அவதானம்
மேற்கு லண்டனின் சவுத்போல் (Southall) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து அவர் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் தற்போது கிழக்கு, மத்திய அல்லது மேற்கு லண்டன் பகுதிகளில் நடமாடக்கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பொதுமக்கள் அவரை நேரடியாக அணுகவோ அல்லது தடுத்து நிறுத்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவரைக் காணும் பட்சத்தில் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு தகவல் வழங்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பாலசங்கர் நாராயணன் இதற்கு முன்னரும் பலமுறை பராமரிப்பாளர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் என காவல்துறையினர் எச்சரித்துள்ளதுடன், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |