கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் : இவரைத் தெரியுமா…!
2025 மே 16 அன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள சுமித்ராராம மாவத்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் துப்பாக்கிதாரியைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேக நபர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றுக்கு அருகில் இருந்த42 வயதுடைய ஆண், 70 வயதான பெண் இருவர் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு சந்தேக நபர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக தொடங்கப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிதாரி தப்பிச் செல்ல உதவியதாகக் கூறி ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் மேலும் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி என அறியப்பட்டவரின் முகத்தை காவல்துறையினர் வரைந்துள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள்
சந்தேக நபர் 30 முதல் 35 வயதுடையவராகவும், 05 அடி 09 அங்குல உயரம் கொண்டவராகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591571, 071- 8596386, அல்லது 074 – 0253623 என்ற தொலைபேசி எண்களில் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

