இவரைத் தெரியுமா -பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை
ஹபராதுவ, உனவடுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து வெளிநாட்டு நாணயங்களை திருடிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஹோட்டலின் உரிமையாளர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் 16,100 அமெரிக்க டொலர்கள், 195,000 ரஷ்ய ரூபிள் மற்றும் 200 யூரோக்களை ரஷ்ய பெண் மற்றும் ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு நபர்களிடமிருந்து திருடிச் சென்றுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட நபர்

நாகியதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தன சமன் குமார என்ற நபரும் இதில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை உனவட்டுன காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதுடன், இதற்காக பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறியும் பொதுமக்கள் 076 – 8477810 என்ற இலக்கத்தின் ஊடாக உனவட்டுன காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.