இவர்களைத் தெரியுமா? மக்களிடம் உதவி கோரும் காவல்துறை (படம்)
2021 டிசம்பரில் இழுவை படகில் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் தேடப்பட்டு வரும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய காவல்துறையினர்பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பல நாள் இழுவை படகில் இருந்து சுமார் 290 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது, சம்பவத்தின் போது இரண்டு சந்தேக நபர்களும் குறித்த படகிலிருந்து கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இலங்கைக்குள் இருந்து போதைப்பொருள் கடத்தலில் மேலும் இருவர் ஈடுபட்டுள்ளதாக சந்தேக நபர்கள் இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்த போதிலும், அவர்கள் தாம் வசிக்கும் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான விதானகே நிராஷ் சானுக வைத்தியசேகர வீரசிங்க மற்றும் 32 வயதான கல்மாங்கொட குருகே திலீப் சமீர சந்தருவன் அல்லது லொகு ஆகிய இருவருமே சந்தேகநபர்களாவர்.
இவ்விரு நபர்களைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், 071- 8592727 அல்லது 011- 2343333 - 4 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

