2009 ற்கு பின்னர் சிறையில் அடித்தே கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் : உடனிருந்தவரின் பகீர் தகவல்
ஒரு நாட்டில் போர் நிறைவுக்கு வந்தால் அரசியல் கைதிகளாக உள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவதும் பரஸ்பரம் பரிமாறக் கொள்ளப்படுவதும் உலக நியதியாகும்.ஆனால் இலங்கையில் அவ்வாறான செயற்பாடு இன்னும் முழுமையாக நடைபெறவில்லை.
இன்றைக்கும் 30 ஆண்டுகளாக அரசியல் கைதிகள் சிறையில் இருப்பது தொடர்கதையாகத்தான் உள்ளது.
2009 ற்கு பின்னர் 11 தமிழ் அரசியல் கைதிகள் சிறைககளில் படுகொலை செய்ய்பட்டுள்ளனர். அந்த கொலைகளின் வடிவங்கள் வெவ்வேறானவையாக உள்ளன.சிறைக்கலவரங்களில் இவர்கள் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் தெரிவித்தார்.
ஐபிசி தமிழ் சக்கர வியூகம் நிகழ்ச்சிக்கு பிரத்தியேகமாக அளித்த நேர்காணலின்போதே சிறையில் தமிழ் அரசியல் கைதிகளின் வலி, அவர்கள் தமது விடுதலையில் உள்ள பெரும் நம்பிக்கைகள் என்பன தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்த கனதியான மேலதிக தகவல்கள் காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
