உள்ளூரில் உள்ளவர்களிடம் அதிகாரங்களை ஒப்படைத்தால் அதிகாரப்பகிர்வு நிச்சயம் : சுட்டிக்காட்டும் சுமந்திரன்

Vavuniya M A Sumanthiran Sri Lanka Local government Election ITAK
By Raghav Apr 28, 2025 05:10 AM GMT
Report

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை உள்ளூரில் உள்ளவர்களிடம் ஒப்படைத்தால் மாத்திரமே பல தசாப்தங்களாக கோரிவரும் அதிகார பகிர்வினை கைகளில் பெறமுடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

வவுனியா (Vavuniya) - புளியங்குளத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசை அப்பிடியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் இல்லை. என்பதை நாட்டுக்கும் உலகுக்கும் சொல்லுவதற்கு இந்த தேர்தலை தமிழ்மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ரணில் முன்னிலை

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ரணில் முன்னிலை

உள்ளூராட்சிமன்ற தேர்தல்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ வவுனியா வடக்கில் போருக்கு பின்னர் கடும் வேகத்தில் குடியேற்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றது. வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுகட்சி ஆட்சியமைப்பதற்காக நாம் பல்வேறு செயற்பாடுகளை எடுத்திருந்தோம்.

உள்ளூரில் உள்ளவர்களிடம் அதிகாரங்களை ஒப்படைத்தால் அதிகாரப்பகிர்வு நிச்சயம் : சுட்டிக்காட்டும் சுமந்திரன் | Political Stance Of The Tamil People Sumanthiran

இன்று நிலைமை மாறியிருக்கிறது. நாட்டிலே ஆட்சி செய்யும் ஒரு அமைப்பு இந்த பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு போட்டியிடுகின்றது.

எனவே மத்தியிலே ஆளும் தரப்பிற்கு இந்த பிதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள்.

நாடாளுமன்றில் எங்களுக்கு அடுத்தபடியாக இருந்த ஒரு கட்சி இன்று தேர்தல் மூலம் தனிப்பெரும்பாண்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஊழல், துஸ்பிரோயகம் என்று மாறிமாறி ஆட்சிசெய்த தரப்பின் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது.

எனவே அவர் 42 சதவீதம் வாக்குகளை எடுத்திருந்தாலும். மாற்றம் வருகின்றது என்ற எதிர்பார்ப்பிலே அடுத்துவந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாண்மை பலத்தை மக்கள் கொடுத்தனர்.

ஆங்கில ஊடகங்களில் தமிழ்தேசியத்தை கொண்டு சேர்த்த தராகி : கொல்லப்பட்டு இருபது ஆண்டுகள்...

ஆங்கில ஊடகங்களில் தமிழ்தேசியத்தை கொண்டு சேர்த்த தராகி : கொல்லப்பட்டு இருபது ஆண்டுகள்...

சாணக்கியனின் தனி முயற்சி

அந்தவகையில் சாணக்கியனின் தனி முயற்சியினால் கிழக்கு தப்பிவிட்டது, துரதிஸ்டவசமாக வடக்கிலும் அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது.

உள்ளூரில் உள்ளவர்களிடம் அதிகாரங்களை ஒப்படைத்தால் அதிகாரப்பகிர்வு நிச்சயம் : சுட்டிக்காட்டும் சுமந்திரன் | Political Stance Of The Tamil People Sumanthiran

ஆனால் எப்படியான முடிவு நாடாளுமன்ற தேர்தலில் வந்திருந்தாலும் அங்கு மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது தமிழரசுக்கட்சியே. ஒரு குடியும் மூழ்கி போகவில்லை. குறைந்திருக்கிறதுதான். ஆனாலும் நாங்கள் தான் இன்றும் பிரதான தமிழ்கட்சி. அதில் மாற்றம் இல்லை.

தேர்தல் முறைமையினால் ஏற்ப்பட்ட பிரதிபலனை வைத்து தமிழ்மக்களின் ஆணையும் எங்களுக்குத்தான் இருக்கிறது ஆகவே தமிழ்த்தேசிய பிரச்சினையை தாங்கள் பார்த்துகொள்வோம் என்று கூறும் அவர்கள் அதிகாரப்பகிர்வில் நம்பிக்கை இல்லாதவர்கள்,வடகிழக்கு இணைப்பையும் பிரித்தவர்கள்.

அவர்கள் தமிழர்களின் ஆணை எங்களிடம்தான் இருக்கிறது என்று சொன்னால் அதைவிட அபத்தம் வேறு எதுவுமில்லை.அதைவிட மோசமான ஆபத்து எதுவும் கிடையாது. அந்த ஆபத்தை உடனடியாக நீக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க..

மனைவியை கொன்று குப்பை மேட்டில் வீசிய கணவன் உட்பட இருவர் கைது

மனைவியை கொன்று குப்பை மேட்டில் வீசிய கணவன் உட்பட இருவர் கைது

உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி :புடின் தொடர்பில் ட்ரம்பிற்கு ஏற்பட்ட சந்தேகம்

உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி :புடின் தொடர்பில் ட்ரம்பிற்கு ஏற்பட்ட சந்தேகம்

பெரும் விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம்

பெரும் விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025