அடியோடு சரிந்த ராஜபக்சாக்களின் கோட்டை : தடம் தெரியாமல் அழிந்த அரசியல் சாம்ராஜ்யம்

Sri Lanka Politician Political Development Current Political Scenario
By Shalini Balachandran Nov 17, 2024 10:33 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அதை அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி படுதோல்வியை சந்தித்த நிலையில் தற்போது நான்கு ஆண்டுகளில் நிலமை தலைகீழாக மாறியுள்ளது.

அனுரா குமார திசாநாயக்க ஜனாதிபதியானதோடு நாடாளுமன்றத்தையும் மிகப்பெரிய பெருபான்மையோடு கைப்பற்றியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சிறீதரன் நியமனம்

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சிறீதரன் நியமனம்

அரசியல் எதிர்காலம் 

இருப்பினும், இந்தமுறை ராஜபக்சாக்களின் கட்சிக்கு மூன்று இடங்களே கிடைத்துள்ள நிலையில் அவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்தும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்க்கலாம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இலங்கை வரலாற்றில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு நீண்டகால வரலாறு உண்டு, மகிந்த ராஜபக்சவின் தந்தையான டான் ஆல்வின் ராஜபக்ச 1947 இல் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.

அடியோடு சரிந்த ராஜபக்சாக்களின் கோட்டை : தடம் தெரியாமல் அழிந்த அரசியல் சாம்ராஜ்யம் | Politics Of The Rajapaksa Family In Sri Lanka

இதையடுத்து, அவர் இறந்த உடன் தனது 21 ஆவது வயதில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைத்து அரசியலிருக்குள் வந்த மகிந்த படிப்படியாக உயர்ந்து 2005 ஆம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியானார்.

அத்தோடு, அவரது சகோதரர் கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு செலாளாராக நியமிக்கப்பட்டார்.

வெளியானது தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள்

வெளியானது தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள்

உள்நாட்டு போர் முடிவு

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபோது இவர்களின் செல்வாக்கு உச்சத்தை தொட்டிருந்த நிலையில் அதற்கு அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரிய வெற்றி, அடுத்து 2015 தேர்தலில் தோல்வி, மீண்டும் 2019 இல் வெற்றி என தொடர்ந்து இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது ராஜபக்ச குடும்பம்.

ஆனால், 2020 ஆரம்பமான கொரோனா பரவல் அதனை தொடர்நத பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய எடுத்த முடிவுகள் நாட்டை மிகப்பெரிய சிக்கலுக்குள் தள்ளின.

அடியோடு சரிந்த ராஜபக்சாக்களின் கோட்டை : தடம் தெரியாமல் அழிந்த அரசியல் சாம்ராஜ்யம் | Politics Of The Rajapaksa Family In Sri Lanka

இதையடுத்து, உருவான மாபெரும் மக்கள் போராட்டத்தினால் மகிந்த ராஜபக்சவும் மற்றும் கோட்டபாய ராஜபக்சவும் பதவி விலக நேரிட்ட நிலையில் அவர்களது செல்வாக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.

இதன்பின், நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால் ஓரளவு நாட்டை கட்டியெழுப்ப முடிந்தாலும் பொருளாதார விலைவாசி அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மையும் தொடர்ந்தது.

சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்கமறுத்த சுமந்திரன்!

சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்கமறுத்த சுமந்திரன்!

தேர்தலில் படுத்தோல்வி

இந்தநிலையில்தான், மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை அடுத்தடுத்த தேர்தலில் படுத்தோல்வியை சந்தித்துள்ளன.

இவ்வாறு 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசியலில் ஈடுபட்டு வந்த ராஜபக்ச அரசியல் சாம்ராஜ்யம் முற்றாக வீழ்த்தப்பட்டுள்ளது.

அடியோடு சரிந்த ராஜபக்சாக்களின் கோட்டை : தடம் தெரியாமல் அழிந்த அரசியல் சாம்ராஜ்யம் | Politics Of The Rajapaksa Family In Sri Lanka

அநுர குமாரவின் அரசு சிறப்பாக செயல்படாமல் விட்டாலும் அடுத்த வாய்ப்பு சஜித்திற்கு செல்லுமே தவிர ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு அரசியல் வாய்ப்பு கிடைப்பது கேள்வுக்குறியே.

ஆனால் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்கள் இந்த கருத்துக்களை புறந்தள்ளுவதுடன் இது குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினரான மிளிந்த ராஜபக்ச ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது மீண்டும் குண்டுத் தாக்குதல் : உச்ச கட்ட பதற்றம்

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது மீண்டும் குண்டுத் தாக்குதல் : உச்ச கட்ட பதற்றம்

அரசியலில் இருந்து ஓய்வு 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 இலும் இதே போல ஒரு பின்னடைவை சந்தித்து மீண்டு வந்துள்ளோம்.

தாங்கள் மட்டுமே தோல்வி அடைந்தது போல சித்தரிப்பது சரி அல்ல, இந்த தேர்தல் தோல்வியால் ராஜபக்ச குடும்பத்தினர் அரசியலை விட்டு விலகி விட மாட்டார்கள்.

அடியோடு சரிந்த ராஜபக்சாக்களின் கோட்டை : தடம் தெரியாமல் அழிந்த அரசியல் சாம்ராஜ்யம் | Politics Of The Rajapaksa Family In Sri Lanka

மகிந்த ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்சவும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் நாமல் ராஜபக்ச கட்சியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வார்” என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு 20 அரசியல் சாம்ராஜ்யம் தற்போது தடம் தெரியாமல் வீழ்ந்துள்ள நிலையில் ராஜபக்சாக்களின் அரசியல் எதிர்காலம் என்பது மீள்கட்டியெழுப்படுவது பெரிய கேள்விக்குரிக்குரிய விடயமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தரப்புகளுக்கு மணிவண்ணன் விடுத்துள்ள அவசர கோரிக்கை

தமிழர் தரப்புகளுக்கு மணிவண்ணன் விடுத்துள்ள அவசர கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024