அதிகரிக்கப்பட்ட மின்கட்டணங்கள் - முழுமையான விபரங்கள் வெளியீடு!
இலங்கை மின்சார சபை முன்வைத்த புதிய மின் கட்டண உயர்வு யோசனைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஆணைக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இதற்கு இணங்கியதன் அடிப்படையில், குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 31 முதல் 60 அலகுகள் வரை தற்போது அலகொன்றுக்கு அறவிடப்படும் ரூ.37 ஆகவும், 61 முதல் 90 அலகுகள் பிரிவின் கீழ் உள்ள கட்டணம் ரூ.42 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நிலையான கட்டணம்

மேலும், முதல் 30 அலகுகளுக்காக நிலையான கட்டணமாக 400 ரூபாயும், 31 முதல் 60 அலகுகள் வரை நிலையான கட்டணமாக 550 ரூபாயும், 61 தொடக்கம் 90 அலகுகள் வரை நிலையான கட்டணம் 650 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுகிறது.
அதேவேளை, 91 முதல் 120 அலகுகள் வரையிலும், 121 முதல் 180 அலகுகள் வரையிலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1500 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இலங்கையில் மின்சார கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.