அதிகரிக்கும் நெருக்கடி -மறு அறிவித்தல் வரும் வரை மின்வெட்டு -வெளியானது அறிவிப்பு
power cut
Ceylon Electricity Board
Ranjan Jayalal
By Sumithiran
மறு அறிவித்தல் வரும்வரை வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை குறித்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விடயமே தெரியாத இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேறு விதமாகப் பேசிக் கொண்டிருப்பதால் நெருக்கடி அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மின்சார உற்பத்திக்காக இந்தியா இலங்கைக்கு கடன் வழங்காது எனவும் அனல் மின் நிலையங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் எண்ணெய் விநியோகம் செய்வதே அவர்களின் நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி