அடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு
நாளை (நவம்பர் -19) முதல் நவம்பர் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, சனிக்கிழமை (19) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (20) 01 மணிநேர மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை (21) 02 மணிநேர மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாவும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு நேர அட்டவணை
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் வார இறுதியில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் ஒரு மணிநேரமும், திங்கட்கிழமை பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



