மின் தடை விவகாரம்! சற்றுமுன்னர் கோட்டாபய பிறப்பித்துள்ள பணிப்பு
மின் தடை தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையில் தற்போது அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது தடையின்றி மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து வழங்குமாறு அரச தலைவர் ராஜபக்ச துறைசார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகேயும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மின்சாரம், எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட விடயங்களுடன் தொடர்புடைய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் குறித்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது மின்சார விநியோகம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதன் தீர்மானத்தைப் பிற்பகல் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின் தடையினை நடைமுறைப்படுத்தவதாயின் அதற்கான காலப்பகுதி தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.