கோட்டாக்கு எதிராக CIDயில் முறைப்பாடு: வரலாற்று சிறப்புமிக்க விகாரையில் அரிய இரத்தினக்கற்கள் திருட்டு

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa NPP Government
By Thulsi Jun 27, 2026 07:10 AM GMT
Report

ருவன்வெலிசாய விகாரையின் கோபுர உச்சியில் அமைந்துள்ள சூடாமணிக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த, சுமார் 1,500 கோடி ரூபா மதிப்புடைய அரிய இரத்தினக்கற்கள் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்டமை குறித்து முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

'சிவ் ஹெள பொது பவுர' அமைப்பின் மலியதேவ தேரர், இசுருமினியே சித்தார்த்த தேரர் மற்றும் முக்கிய சிவில் சமூக ஆர்வலரான துலான் சேனாதீர ஆகியோரால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சக்கு எதிரான இந்தப் முறைப்பாட்டுப் பத்திரம் சிஐடி தலைமையகத்தில் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது.  

பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து - 42 பேர் காயம்

பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து - 42 பேர் காயம்

கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர் 

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமுறைப்பாட்டாளர்கள், கடந்த 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ருவன்வெலிசேய மகா சாய விகாரையின் பல தசாப்த காலப் பழமைவாய்ந்த அசல் சூடாமணிக்கல் இரகசியமாகக் கழற்றப்பட்டு, அதற்குப் பதிலாக போலியான வேறொரு சூடாமணிக்கல் கோபுர உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது.

கோட்டாக்கு எதிராக CIDயில் முறைப்பாடு: வரலாற்று சிறப்புமிக்க விகாரையில் அரிய இரத்தினக்கற்கள் திருட்டு | Theft Worth 15 Billion From Ruwanwelisaya Gemstone

இந்தச் சட்டவிரோத மாற்றத்தின் போது, அசல் சூடாமணிக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த சுமார் 1,500 கோடி ரூபா பெறுமதியான விலைமதிப்பற்ற அரிய இரத்தினக்கற்கள் அனைத்தும் முற்றாகத் திருடப்பட்டுள்ளன.

அன்றைய காலகட்டத்தில் ருவன்வெலிசேய விகாரையின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பல்லேகம ஹேமரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்சமயம் பல்வேறு நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய தொழிலதிபர் விரஞ்சித் தாம்புகல ஆகியோர் இணைந்து, தங்களுக்குள் இருந்த நெருங்கிய அரசியல் மற்றும் இராஜதந்திரத் தொடர்புகளைப் பயன்படுத்தியே இந்த மகா கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர் என முறைப்பாட்டில் நேரடியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆட்சிக் காலங்களில் இந்த விவகாரம் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், அப்போதைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி 'திருடனின் தாயிடம் மை போட்டுப் பார்ப்பது போல', சி.ஐ.டியின் அன்றைய பணிப்பாளர் முறைப்பாடு செய்த சிவில் சமூகப் பிரதிநிதிகளையே பழிவாங்கலாகக் கைது செய்து சிறையில் அடைத்திருந்ததாகச் சிவில் ஆர்வலர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.

கப்பல் மீதுட்ரோன் தாக்குதல்: முட்டாள்தனம்: ஈரான் மீது ஜனாதிபதி டிரம்ப் சீற்றம்

கப்பல் மீதுட்ரோன் தாக்குதல்: முட்டாள்தனம்: ஈரான் மீது ஜனாதிபதி டிரம்ப் சீற்றம்

கர்மவினை சரியாகப் பலித்துள்ளது

மகா சாயவின் அசல் சூடாமணிக்கல் அகற்றப்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான தருணத்திலேயே, கோட்டாபய ராஜபக்ச ருவன்வெலிசேவுக்கு முன்னால் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார் என்றும், புனித இடத்துக்கு இழைத்த இந்தத் துரோகத்தின் காரணமாகவே இன்று அவர்களுக்குரிய கர்மவினை மிகச் சரியாகப் பலித்துள்ளது என்றும் அவர்கள் சாடினர்.

கோட்டாக்கு எதிராக CIDயில் முறைப்பாடு: வரலாற்று சிறப்புமிக்க விகாரையில் அரிய இரத்தினக்கற்கள் திருட்டு | Theft Worth 15 Billion From Ruwanwelisaya Gemstone

தற்போது நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும் புதிய அரசு பதவியில் இருப்பதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் இந்த விவகாரம் குறித்த முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு முறைப்பாட்டாளர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பௌத்த மக்களின் மிக உயரிய வழிபாட்டுத் தலத்தில் அரங்கேறியுள்ள இந்த விபரீத மோசடி குறித்து விரிவாக ஆராய, விசேட உளவுத்துறை அதிகாரிகள் குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முடுக்கிவிடுமாறும், இதனுடன் தொடர்புடைய அனைத்துத் தராதரமிக்க குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டனையைப் பெற்றுக்கொடுக்குமாறும் சிவில் அமைப்புகளும் மகா சங்கத்தினரும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பில் பரிதாபமாக பலியான கர்ப்பிணித் தாய்!

மட்டக்களப்பில் பரிதாபமாக பலியான கர்ப்பிணித் தாய்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி