கப்பல் மீதுட்ரோன் தாக்குதல்: முட்டாள்தனம்: ஈரான் மீது ஜனாதிபதி டிரம்ப் சீற்றம்
'எவர் லவ்லி' (Ever Lovely) என்ற வணிக கப்பல் மீது ஈரான் ஆளில்லா ட்ரோன் தாக்குதல் நடத்தியமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முட்டாள்தனமான மீறல் என்றும் டிரம்ப் கண்டித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த 'எவர் லவ்லி' கப்பலின் மேல் தளத்தில் ஈரான் ஏவிய ஆளில்லா ட்ரோன் தாக்கியதில் சேதம் ஏற்பட்டது.
ஹோர்முஸ் நீரிணை
ஈரான் மொத்தம் நான்கு ஆளில்லா ட்ரோன்களை ஏவியதாகவும், அதில் மூன்றை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பலின் சில பகுதிகள் சேதமடைந்த போதும் கப்பலில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கொள்கலன் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து தனது பயணத்தை நிறைவுசெய்துள்ளதாகவும், தற்போது தனது பயணத்தைத் தொடர்வதாகவும் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் (MPA) தெரிவித்துள்ளது.
யுகே கடல்சார் வர்த்தக நடவடிக்கையின் பரிந்துரைக்கப்பட்ட பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, ஓமான் கடற்பரப்பில் இருந்த கப்பலின் மீது "அடையாளம் தெரியாத பொருள்" ஒன்று மோதியதாக எவர்கிரீன் மரைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்