மயிலத்தமடு ஆர்ப்பாட்டம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு(படங்கள்)

Batticaloa M A Sumanthiran Ranil Wickremesinghe Journalists In Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Shadhu Shanker Nov 17, 2023 10:05 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதாக ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 08ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வருகைதந்திருந்தார்.

இந்த நிலையில் அவரின் வருகையின்போது தமது கோரிக்கையினை வலியுறுத்தி கால்நடை பண்ணையாளர்கள், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள்,சிவில் சமூகப்பிரதிகள் அமைதியான முறையில் போராட்டம் நடாத்தினார்கள்.

உலக கிண்ண வெற்றியணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா...!

உலக கிண்ண வெற்றியணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா...!

தொடர் போராட்டம்

இதன்போது காவல்துறையினர் வீதி தடைகளை ஏற்படுத்தி பெருமளவு காவல்துறையினர் மற்றும் கலகமடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் காரணமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

மயிலத்தமடு ஆர்ப்பாட்டம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு(படங்கள்) | Precident Aginst Protest Journalist Judgement

எனினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிவித்து 30பேருக்கு எதிரான வழக்கினை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்துறையினர் நிலையங்கள் ஊடாக பல்வேறு இடங்களை சேர்ந்தவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

உணவு புரைக்கேறியதால் இளைஞன் உயிரிழப்பு : யாழில் சம்பவம்

உணவு புரைக்கேறியதால் இளைஞன் உயிரிழப்பு : யாழில் சம்பவம்

இரண்டு ஊடகவியலாளர்கள்

இதில் போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள், குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் என 30பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மயிலத்தமடு ஆர்ப்பாட்டம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு(படங்கள்) | Precident Aginst Protest Journalist Judgement

இந்த வழக்கு நேற்றைய தினம் ஏறாவூர்ப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள் சார்பில் அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத், சட்டத்தரணிகளான சி.ஜெகன்,மயூரி ஜனகன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கு தாக்கல்

இதன்போது அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும் நீதிமன்றத்தினை தவறான முறையில் கொண்டுசெல்லும் வகையிலும் காவல்துறையினர் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் தமது கடமையினைச்செய்யச்சென்றபோது அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதன் மூலம் அரசாங்கத்தற்கு எதிரான போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிப்பதற்கு செல்லக்கூடாது என்பதற்காக இவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்றில் கவனத்திற்கு அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கொண்டுவந்தார்.

மயிலத்தமடு ஆர்ப்பாட்டம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு(படங்கள்) | Precident Aginst Protest Journalist Judgement

குறித்த வழக்கினை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

தாங்கள் இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை சமர்ப்பிக்கவுள்ளதனால் தங்களுக்கு திகதியொன்றை தருமாறு காவல்துறையினர் கோரிய நிலையில் இருவாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்னிலையானவர்கள் பிணை இல்லாமல் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதுடன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகாதவருக்கு மட்டும் அழைப்பானை வழங்க பணிக்கப்பட்டுள்ளதாக அதிபர் சட்டத்தரணி ம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வானில் தென்படவுள்ள விண்கல்: இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு

வானில் தென்படவுள்ள விண்கல்: இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024