கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணித்தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்தது
srilanka
corona
pregnancy
By Sumithiran
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுமார் 200 கர்ப்பிணித் தாய்மார்கள் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சிசு பிரசவ விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கர்ப்பிணித் தாய்மார்கள், கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது சிறந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்கின்றமை குறித்த அறிவிப்பு இன்றைய தினத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொற்றுக்குள்ளான இரண்டு கர்ப்பிணித்தாய்மார்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்