முட்டைகளை கழுவி விட்டு உண்பவர்களா நீங்கள்....! காத்திருக்கும் ஆபத்து
முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முட்டை ஓடு முழுமையாக மூடப்படவில்லை. இது மிக நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது.
கழுவிய முட்டைகள் சந்தையில் பொதி
எனவே, முட்டைகளை கழுவும் போது, மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் மலம் தண்ணீரில் கரைந்து முட்டையின் உள்ளே நகரும் வாய்ப்பு உள்ளது.
நுண்ணுயிரிகள் அதில் நுழைந்தால், அவை விரைவாக வளர்ந்து நச்சு நிலைமைகளை ஏற்படுத்தும்.
முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக முட்டையின் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் முட்டைக்குள் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்
எனவே, கழுவிய பின் முட்டைகளை சேமிக்க முடியாது. கழுவிய முட்டைகள் சந்தையில் பொதி செய்யப்படுவதில்லை.
முட்டை உற்பத்தி செயல்முறையின் போது அழுக்கு, தூசி மற்றும் மலம் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நல்ல தரமான மேலாண்மை முறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் உள்ளன என சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
