தமிழ்மக்களின் களமாக விளங்கும் அதிபர் தேர்தல்: தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து

Election Commission of Sri Lanka Tamils Sri Lanka Election
By Beulah Dec 25, 2023 02:07 AM GMT
Report

எதிர்வரும் அதிபர் தேர்தல் கனதியானதொரு செய்தியைக் கூறுவதற்கான களமாகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்குவது குறித்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டியது அவசியமா? ஆமெனில், அதற்குப் பொருத்தமான நபர் யார்? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணிகள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை : பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து

சட்டத்தரணிகள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை : பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து

தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகள்

அவ்வகையில், இவ்விடயம் தொடர்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன்,

தமிழ்மக்களின் களமாக விளங்கும் அதிபர் தேர்தல்: தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து | President Election 2024 Tamil Politicians

“இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகளும், டெல்லிக்கு வழங்கும் வாக்குறுதிகளும் அடுத்த கணமே காற்றில் பறக்கவிடப்படுகின்றனர்.

எனவே சிங்கள அரசியல் தலைமைகளின் அசமந்தப்போக்கைச் சுட்டிக்காட்டக்கூடியவாறு எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் பொது வேட்பாளரொருவரை நிறுத்தி, அவருக்கு வாக்களிக்கவேண்டியது அவசியம்.” என்றார்.

அதேவேளை தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தனது பெயரை முன்மொழிந்தால், அப்போதைய கள நிலவரங்களை அடிப்படையாகக்கொண்டு அதனைப் பரிசீலனை செய்வதற்குத் தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர்

அதன்படி இதுபற்றிக் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

தமிழ்மக்களின் களமாக விளங்கும் அதிபர் தேர்தல்: தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து | President Election 2024 Tamil Politicians

“தமிழ்மக்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்கும் வகையில் இரண்டாம் விருப்பத்தெரிவின்றி, தமிழ் வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களித்தால் தான் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்குவதில் பயனிருக்கும்.

ஆனால் சி.வி.விக்கினேஸ்வரனோ அல்லது எம்மைத் தவிர்த்த வேறு எந்தவொரு தரப்பினரோ தமிழ்மக்களை ஏமாற்றி, அவர்களைத் தமக்கு வேண்டிய நபருக்கு வாக்களிக்கச்செய்யும் வகையிலான உத்தியாகவே இதனைப் பயன்படுத்திக்கொள்வர்.

ஏனெனில் குறித்த அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இரண்டாவது விருப்பு வாக்கை யாருக்கும் அளிக்கக்கூடாது என அவர்கள் உறுதியாகக் கூறமாட்டார்கள்.

ஆகவே பொது வேட்பாளரை நிறுத்துவதால் எதிர்பார்க்கப்படும் உரிய பலனைப் பெறமுடியாது. ஆனால் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் வலுவானதொரு செய்தியைக் கூறியேயாகவேண்டும்.

எனவே அத்தேர்தலில் தமிழர்கள் அனைவரும் வாக்களிக்காமல் முற்றுமுழுதாக ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.” என்றார்.

தமிழ்த்தேசிய விடுதலைக்கான இலக்கு

அதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் அறியத்தருகையில்,

தமிழ்மக்களின் களமாக விளங்கும் அதிபர் தேர்தல்: தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து | President Election 2024 Tamil Politicians

“தமிழ்த்தேசிய விடுதலையை இலக்காகக்கொண்ட சமஷ்டி முறைமையிலான தீர்வை முன்னிறுத்தக்கூடியவகையில் தமிழ்த்தேசியம் சார்ந்த ஒருவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்கலாம்.

தமிழ் வேட்பாளரொருவர் அதிபர் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு எனினும், இதன்மூலம் தமிழர்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய கனதியான செய்தியை வெளிப்படுத்தமுடியும்.

அதேபோன்று விரும்பினால் இரண்டாவது விருப்பு வாக்கை பெரும்பான்மையின வேட்பாளருக்கு வழங்கலாம்.

தமிழ்மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் களமாக எதிர்வரும் அதிபர் தேர்தலைப் பயன்படுத்தலாம் என்பதே எனது அபிப்பிராயம்.” என்றார். 

அசுர வளர்ச்சியடையும் புதிய கட்சி: ரணில் தலைமையிலான அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அசுர வளர்ச்சியடையும் புதிய கட்சி: ரணில் தலைமையிலான அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்          


ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி வடக்கு, Nürnberg, Germany

23 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Munchen, Germany

15 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம்

22 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

24 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சுன்னாகம், யாழ்ப்பாணம், London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020