பொதுவேட்பாளர் விடயத்தில் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்: ஜனா எம்.பி. திட்டவட்டம்

Tamils Anura Dissanayake Sajith Premadasa President of Sri lanka Sri Lanka Presidential Election 2024
By Shadhu Shanker May 03, 2024 10:46 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

 “சர்வதேச நாடு ஒன்றின் சாட்சியுடன் ஒரு இணக்கத்திற்கு வந்து அதிபர் தேர்தலில் வாக்குறுதிகளைப் பெற்று வாக்களிப்பதா? அல்லது பொதுவேட்பாளரை நிறுத்துவதா? என்பதை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 வது நினைவு தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(03.05.2024) மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தலைமையில் இடம்பெற்ற போதே அவர் அதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்.. “எங்களது போராட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களை நழுவ விட்டுள்ளோம் அதில் ஒன்றுதான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஆகும்.

மரக்கறி விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

மரக்கறி விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

அதிபர் தேர்தல்

வடகிழக்கு மக்கள் சோற்றுக்காக தான் போராடினார்கள் என்பது அதிபர் வேட்பாளர் அனுர குமார திசாநாயக்காவின் கணிப்பு. அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்கிறார். இதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ளவர்களை அழைத்து கூறவேண்டும்.

பொதுவேட்பாளர் விடயத்தில் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்: ஜனா எம்.பி. திட்டவட்டம் | President Election Sri Lanka Tamil Canditate Issue

அதுமாத்திரமின்றி இதனை தெற்கில் உள்ள மக்களுக்கும் தெரிவித்து அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை பகிரங்கமாகக் கொண்டு வரவேண்டும் எதிர்வரும் அதிபர் தேர்தலில் நாங்கள் எங்களது பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

நாங்கள் சுயமாகச் செற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம், எங்களது உரிமைகளைப் பறிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தியை இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கு உணர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது.

நீலப் பொருளாதார மாநாட்டில் பேச்சாளராக கலந்து கொள்ளும் இரா.சாணக்கியன்...!

நீலப் பொருளாதார மாநாட்டில் பேச்சாளராக கலந்து கொள்ளும் இரா.சாணக்கியன்...!

பொது வேட்பாளர் 

எங்களால் நிறுத்தப்படுகின்ற பொது வேட்பாளர் அதிபராக தெரிவு செய்யப்பட மாட்டார் அது அனைவரும் அறிந்த விடயம் நாங்கள் வாக்களித்து தெரிவு செய்யப்படும் அதிபர் எங்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை.

பொதுவேட்பாளர் விடயத்தில் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்: ஜனா எம்.பி. திட்டவட்டம் | President Election Sri Lanka Tamil Canditate Issue

கடந்த 6 அதிபர்களில் 2 அதிபர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு நாங்கள் வாக்களித்திருக்கின்றோம். எனவே நாங்கள் வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவரும் எமக்கு ஒன்றும் செய்யவில்லை.நாம் தற்போது சிதறுண்டு கிடக்கின்றோம்.

இக்காலத்தில் எமது பலத்தை நாம் காட்டாமல் விட்டால் எங்களது சந்ததிகூட நிம்மதியாக வாழமுடியாத நிலையாகிவிடம். எனவே நாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் தேவை ஏற்படின் சர்வதேச நாடு ஒன்றின் சாட்சியுடன் ஒரு இணக்கத்திற்கு வந்து அதிபர் தேர்தலில் வாக்குறுதிகளைப் பெற்று வாக்களிப்பதா? அல்லது பொதுவேட்பாளரை நிறுத்துவதா? என்பதை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்.

இல்லையேல் அவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை அற்றவர்கள், சுயநலத்திற்காகவும், தங்களுடைய கட்சி நலத்திற்காகவும் அரசியல் செய்பவர்கள், என்கின்ற நிலைக்கு தாங்களே தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள்” என அவர்  தெரிவித்துள்ளார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024