காத்தான்குடிக்கு ஜனாதிபதி எல்.எம்.ஏ ஹிஸ்புல்லாவா! நரசபை உறுப்பினர்கள் கேள்வி
காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளை பார்க்கும் போது காத்தான்குடிக்கு ஜனாதிபதி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.எம்.ஏ ஹிஸ்புல்லாவா? நகரசபை இலங்கை நாட்டிற்குள் உள்ளதா? என கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
நகரசபை எதிர்கட்சி உறுப்பினர்களான ஏ.எம்.ஏ. பர்சாத், எம்.எப்.எம். கலீல் பாரி, ஜுனைட் முஜீப் ஆகியோர் ஒன்றினைந்து இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுற்றுலா துறை அமைச்சினால் 4 மில்லியன் ரூபா பெறுமதியான 4 சுற்றுலாத்துறை படகுகளை வழங்கினார். அது வருமானத்தை அதிகரிப்பதற்காக இருந்த போதும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை.
சட்ட ஒழுங்கு பேணப்படவில்லை
அந்த படகை செலுத்தும் சாரதி உண்மையில் நீச்சல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று அனுமதிகள் சரியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அனுமதிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

சட்ட ஒழுங்கு பேணப்படவில்லை முறையான அனுமதிகள் வழங்கப்படுவதில்லை. எதிர்கட்சி வேறு ஆளும்கட்சி வேறு என பிரித்து அங்கு வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றதுடன் முறையற்ற விதத்தில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அண்மையில் சுற்றுலா துறை அமைச்சினால் படகு ஒன்று வழங்கப்பட்டு சேவையில் இடப்பட்டது. ஆனால் நகர சபை உறுப்பினர்களுக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பிதழ் வரவில்லை அதற்கு உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் திணைக்கள தலைவர்கள் எந்தவிதமான அனுமதியையும் வழங்கவில்லை.
இவ்வாறு எந்தவிதமான அனுமதியையும் பெறாது சட்டத்திற்கு முரணாக செயற்படுகின்றனர்.
பொதுமக்கள் முறைப்பாடு
மண்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற இருந்த அந்த கூட்டத்திற்கு நகர சபையில் அங்கம் வகிக்கும் எதிர்கட்சியான 3 கட்சிகளைச் சேர்ந்த எங்களுக்கு எந்த விதமான அழைப்பம் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டபோது புதிய சுற்று நிருபத்தின் படி நகரசபை தவிசாளர் மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்து தருமாறு நகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் நகரசபை தவிசாளர் முரணாக எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
காரணம் மத்திய கல்லூரி மைதானம் தொடர்பாக பொதுமக்கள் எங்களிடம் பல முறைப்பாடுகளை செய்திருந்தனர் இது தொடர்பாக நாங்கள் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாட இருந்தோம் இதை அறிந்த எங்களை இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை.
இது ஒரு ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |