மகிந்தவிடமிருந்து கோட்டாபயவிடம் செல்லும் உயர் அதிகாரி
பிரதமரின் செயலாளர் காமினி செனரத்(Gamini Senarath) நாளை மறுதினம் (19) அரச தலைவரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
அரச தலைவரின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர(Dr. PB Jayasundara) கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அவரால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான காமினி செனரத், மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa)அரச தலைவராக இருந்த காலத்தில் அவரின் தலைமை அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க(Anura Dissanayake) எதிர்வரும் 20ஆம் திகதி பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
பிரதமரின் செயலாளராக நியமிக்கப்படவுள்ள அநுர திஸாநாயக்க, இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியாகவும் கடமையாற்றியவர், கல்வி அமைச்சு, மகாவலி அமைச்சு உட்பட பல அமைச்சுக்களின் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.