உண்மையை பொய்யாக்கி ஆட்சிக்கு வந்த “ஊறுகாய்” அரசாங்கம்! கொந்தளிக்கும் எதிரணி
உண்மையை பொய்யாக்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதே கொள்கையை பின்பற்றி அதிகாரம் தக்கவைக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka) தெரிவித்துள்ளார்.
நம் நாடு ஓர் அரசாங்கமா அல்லது ஊறுகாயா என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பைப் பார்க்கும் போது, அரசாங்கம் மக்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. இந்த அரசாங்கம் எப்போதும் மக்கள் சார்பான ஆட்சியை பார்க்காமல் குடும்ப நல ஆட்சியையே பார்க்கிறது.
உண்மையை பொய்யாக்கி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதே கொள்கையை பின்பற்றி அதிகாரம் தக்கவைக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது. இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது எண்ணெய் விலை பற்றி பேசினார்கள்.
உலக சந்தையில் கூடும் போது அதிகரிக்கவும், குறையும் போது ஏன் குறைக்க வேண்டும் என்று கேட்டதாக அப்போது கூறப்பட்டது. அப்படிச் சொன்னவர்கள் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள், எமது கடந்த அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரத்தை விமர்சித்தோம்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சூத்திரத்தின்படி சிறிது சிறிதாக உயரும்போதோ அல்லது குறையும் போதோ எண்ணெய் விலையை உடனடியாகக் குறைத்து மக்களுக்கு பலனைக் கொடுத்து வந்தோம்.
உண்மையில் அந்த விலைச் சூத்திரம் இன்று நடைமுறையில் இருந்திருந்தால், உலகளவில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்து வரும் இவ்வேளையில் எண்ணெய் விலையைக் குறைக்க முடியும். இந்த அரசின் சுரண்டல் விலைச்சூத்திரத்தின்படி, உலக சந்தையில் அதிகரிக்க அதிகரிக்க, உலக சந்தையில் குறையும்போது அதிகரித்து வரும் வினோதமான சூத்திரத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது.
ஆட்சிக்கு வந்து பதினைந்து மாதங்களாகியும் உலக சந்தையில் வரம்பற்ற விதமாக எண்ணெய் விலை குறைவதைப் பார்த்தோம். ஆனால் அந்த பலனை இந்த அரசால் மக்களுக்கு வழங்க முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக உலக சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
நம் நாடு ஓர் அரசாக அல்ல ஊறுகாய் போல உள்ளது.
சிலர் இந்த அரசாங்கத்தைச் சுற்றி அமர்ந்து சில கயிறுகளைக் கொடுத்தனர். மிகவும் திமிர்பிடித்த பல முடிவுகளை எடுத்தது. காலை வெளியிடப்பட்ட வர்த்தமானி இரவில் தலைகீழாக மாறுகிறது.
இப்படிப்பட்ட ஊறுகாய் அரசாங்கம் கடந்த ஆண்டு முழுவதும் நம் நாட்டில் இருந்தது. நாட்டுக்கு ஒன்று - அமைச்சரவைக்கு ஒன்று - சர்வதேசத்துக்கு ஒன்று - ஊடகங்களுக்கு ஒன்று என்று சொல்லப்படுகிறது.
கடைசியில் சேற்றில் பட்டை போல் தலைவர்கள் அங்கும் இங்கும் நடமாடும் போது நாடு பெரும் அதளபாதாளத்தில் விழுந்துள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. 2021ஆம் ஆண்டு முழுவதும் அரசாங்க அமைப்பு மாற்றத்தின் முடிவுகளை மக்கள் அனுபவித்தார்கள்.
இதன் விளைவாக நாட்டில் பல மாற்றங்களை நாம் கண்டுள்ளோம். சமையல் அறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடிகுண்டு போல் வெடித்தது. தேசத்திற்கு சோறு போட்ட விளைநிலங்கள் பாழ்நிலமாக மாறுவதைப் பார்த்தோம். உரம் இன்றி விவசாயிகள் வீதிக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த ஒரு வருடமாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்கள் எவ்வாறு குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள் மற்றும் முறைமை மாற்றத்தின் கீழ் புனிதர்களாக்கப்பட்டது என்பதை இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.