துருக்கி அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்..!
World
By Kiruththikan
துருக்கியில் கடந்த 15 ஆம் திகதி அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றது.
இதில் தற்போதைய அதிபர் தய்யீப் எர்டோகனும், எதிர்க் கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமால் கிலிக்சத்ரோ இடையே கடும் போட்டி நிலவியது.
துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது.
வாக்குப்பதிவு
இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும் கெமால் கிலிக்சதரோ 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இன்று (28) அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி