மூன்று மதங்களின் பின்னர் மீண்டும் செயற்படும் அதிபர் செயலகம்..!
மக்கள் போராட்டத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்தப்பட்டிருந்த அதிபர் செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக அதிபர் செயலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதேவேளை, கடந்த 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து போராட்டக்காரர்களால் அதிபர் செயலகம் கைப்பற்றப்பட்டு மக்கள் பார்வைக்கு விடப்பட்டிருந்தது.
முப்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கை
எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காவல்துறையினர் முப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அதிபர் செயலகத்தில் இருந்து வெளியேற்றினர்.
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட பல எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர்.
மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பணிகள்
இந்த நிலையில், குறித்த செயலகத்தின் பணிகள் சுமார் 3 மாதங்களிற்கு பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.