சிறிலங்கா சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்- கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஐ.நா பிரதிநிதி!
By Kalaimathy
சிறிலங்கா அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பிரதிநிதி வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும் கைதிகளை தவறாக நடத்துவதாக கண்டனம் தெரிவிக்கும் அதே வேளையில், ஒரு தேசத்தின் கடமை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி அதிருப்தி வெளியிட்டு தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிறைசாலை சீர்திருத்தம் மற்றும் போதை மறுவாழ்வு குறித்த எங்கள் பணிகளில் சிறைகளில் உள்ள அனைவரின் உரிமைகளையும் நிலைநாட்டும் திறன்களை வலுப்படுத்தச் செய்யாது இது போன்று தவறாக நடந்துகொள்வதையும் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தனது ருவிட்டார் பதிவில் தெரிவித்துள்ளார்.
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்... 21 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி