பாகிஸ்தானுக்கு பறக்க தயாராகும் பிரதமர் ஹரிணி அமரசூரிய!
பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சகத்தில், விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க - ஈரான் மோதல்
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் லால் காந்த, அரசியல் ரீதியாக பாகிஸ்தான் ஒருபோதும் இலங்கை மீது தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்தது இல்லை எனக் குறிப்பிட்டதுடன், எவ்வித அரசியல் லாபங்களையும் எதிர்பாராமல் இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருவதற்காக பாகிஸ்தானுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க - ஈரான் மோதல் விவகாரத்தில் பாகிஸ்தானின் தலையீடு மற்றும் செயல்பாடு பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய உயர்ஸ்தானிகர் நசீர், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் என்பதால், இருதரப்பிலும் பரஸ்பர உதவிகளைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |