கனேடிய மக்களுக்கு நன்றி பாராட்டிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ
மக்கள் தமக்கு வழங்கி வரும் ஆதரவிற்காக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மனைவியை பிரிவது தொடர்பில் வெளியிட்ட அறிவித்தலைத் தொடர்ந்து தமக்கு கிடைக்கப் பெற்ற ஆதரவு தொடர்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
முடிவிற்கு வரும் திருமண வாழ்க்கை

மனைவி கிரகரி ட்ரூடோவை பிரிவதாக அறிவிப்பு வெளியானது முதல் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவு மற்றும் ஆறுதல் வார்த்தைகள் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக தாம் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் திகதி 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை நிறைவுக்கு வருவதாக ட்ரூடோ தம்பதியினர் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் நாட்டிற்கு சேவை

குடும்ப வாழ்க்கை தொடர்பிலான அழுத்தங்களிலிருந்து வெளியேறி தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கான சேவைகளில் தீவிர முனைப்பு காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.