பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய நெருக்கடி: இளவரசர் ஆண்ட்ரூ கைதுக்கு மன்னர் சார்லஸ் ஆதரவு
பதவியைத் தவறாகப் பயன்படுத்திய விவகாரத்தில் கைதாகியுள்ள தனது சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ஸ்டர் விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் எனப் பிரிட்டன் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மன்னர் சார்லஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டுகள் குறித்துத் தான் கவலையுடன் அறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான விசாரணை
இந்த விவகாரத்தில் அதிகாரிகளால் முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்குத் தனது முழுமையான ஒத்துழைப்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்பதைத் தான் தெளிவாகக் கூறிக்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் மூன்றாவது மகனான ஆண்ட்ரூ, ஏற்கனவே அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியிருந்தார்.
இதையடுத்து, அவர் தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் புதிய குற்றச்சாட்டில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |