மீண்டும் சவுதியின் சுல்தான் விமானப்படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்
Missile
Saudi Arabia
Iran
Iran-US Conflict
By Sumithiran
சவுதி தலைநகர் ரியாத் அருகே உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த விமானப்படை தளம் பல அமெரிக்க போர் விமானங்களுக்கு தாயகமாக உள்ளது,
ரியாத் மற்றும் கிழக்கு மாகாண பிராந்தியங்களில் குறைந்தது 10 ட்ரோன்களை இடைமறித்துள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'சால்வோ' ஏவுகணைத் தாக்குதல்
இருப்பினும், ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், இந்தத் தளத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல் ஒரு 'சால்வோ' ஏவுகணைத் தாக்குதல் என்று கூறியுள்ளது.

ஒரு சால்வோ ஏவுகணைத் தாக்குதல்(salvo missiles ) என்பது ஒரே இலக்கு அல்லது பகுதியில் ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவுவதாகும். ஈரானும் ரஷ்யாவும் இந்த முறையை பரவலாகப் பயன்படுத்தும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |