போதைப்பொருளுடன் கைதான பாடசாலை அதிபர் : நீதிமன்றின் உத்தரவு
Sri Lanka Magistrate Court
Sri Lankan Schools
Drugs
Arrest
By Sumithiran
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை டிசம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தௌத்கம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி, அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஒரு கிலோகிராமுக்கு மேல் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
புதைக்கப்பட்டிருந்த ஹெரோயின் மீட்பு
எப்பாவல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குப் பின்னால் புதைக்கப்பட்டிருந்த அதிபருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 1 கிலோகிராம் 185 கிராம் ஹெரோயின், கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலதிகமாக, அதிபர் போதைப்பொருட்களை அளவிடப் பயன்படுத்தப்படும் மின்னணு தராசு மற்றும் பொலிதீன் சீலர் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி