சிறை கொரோனா கொத்தணி கட்டுப்பாட்டுக்குள் வந்தது
corona
prison
pcrtest
By Jaso
சிறைச்சாலைகளில் கொவிட் -19 தொற்று பரவாமல் தடுக்க சிறை சுகாதாரத்துறை மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களால் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சிறை ஊடக செய்தித் தொடர்பாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் சிறைகளில் வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறைகளில் இதுவரை 246 கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய விளக்கமறியல் கைதிகள் மற்றும் கைதிகள் சார்பாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்