இன்று பொறுப்பேற்கும் புதிய காவல்துறை மா அதிபர்
இலங்கையின் 37 ஆவது காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61 ஈ (ஆ) பிரிவின்படி, அரசியலமைப்பு பேரவை இந்த நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, இன்று (14) கொழும்பு (Colombo) 02 இல் அமைந்துள்ள காவல்துறை தலைமையகத்தில் காவல்துறை மா அதிபராக பொறுப்பேற்பார்.
முதலாவது காவல்துறை மா
தேசபந்து தென்னகோன் காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் குறித்த பதவிக்கு பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியிருந்த அரசியலமைப்பு பேரவை இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இலங்கை காவல்துறை கான்ஸ்டபிள், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறை அத்தியட்சகர் ஆகிய மூன்று கட்டங்களையும் தாண்டி காவல்துறை மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா
